பிரித்தானிய அரச இராணுவத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்துள்ளது.
HMS SPEY என்ற குறித்த கப்பல் 90.5 மீட்டர் நீளம் கொண்டதாக கூறப்படுகிறது.
அந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் போல் கேடி தலைமையில், 56 படையினர் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
நேற்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கும்.
இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடற்படை பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.