Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்ரிகர்களுக்கு விசேட பேருந்து சேவை

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்ரிகர்களுக்கு விசேட பேருந்து சேவை

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குறித்த விசேட பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 க்கு பலாங்கொடையில் இருந்து புறப்படும் பேருந்து பொகவந்தலாவை வீதியின் ஊடக நோர்வூட் பிரதான நகரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நல்லதண்ணியை சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles