Monday, May 13, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம – வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விசேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் ஆகிய இருவருமே இந்த விபத்தில் உயிரந்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ வீரர், மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles