Monday, May 20, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு400 கணக்காய்வாளர் பதவி வெற்றிடங்கள்

400 கணக்காய்வாளர் பதவி வெற்றிடங்கள்

சுமார் 400 கணக்காய்வாளர் பதவிகள் வெற்றிடங்களாக உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றிடங்கள் காரணமாக, தணிக்கை சேவைகள் அதிகபட்ச நிர்வாகத்துடன் செய்ய நேரிட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் பி. சி. விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கணக்காய்வாளர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கமைவாக தற்போது அரச சேவையில் கடமையாற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன், அதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles