Monday, May 12, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கர்தினால் மனு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கர்தினால் மனு

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் கர்தினால் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

மனுதாரர் கர்தினால், சம்பந்தப்பட்ட சட்டத்தில் உள்ள விதிகள், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைக்க இராணுவம், காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் அளித்துள்ளது என்று கூறுகிறார்.

இதன் மூலம் அரசியல் சாசனம் வழங்கிய தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட மாகாண வரைபு நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு மூலமாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தை கர்தினால் அவர்கள் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles