Sunday, May 12, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு இளைஞர் காயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு இளைஞர் காயம்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் ஒஹியா புகையிரத நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் 29 வயதான மொஹமட் நசாப் நிமா என்ற ஈரான் பிரஜை ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வெளிநாட்டவர் அதே ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 1990 அம்புலன்ஸ் மூலம் தியத்தலாவை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாலை 4:35 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் காரணமாக அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles