கதிர்காமம், புத்தல வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
நேற்று (22) பிற்பகல் 2.30 மணியளவில் கதிர்காமம் – கிரிந்த வீதியில் பயணித்த யாத்ரிகர் ஒருவரை ஏற்றிச் சென்ற பேருந்து புத்தல நுழைவாயிலுக்கு அருகில் காட்டு யானையினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டு யானை பேருந்தில் இருந்த பழங்கள் மற்றும் உணவு பொருட்களை சாப்பிடுவதற்காக பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதனால், பேருந்தின் கதவு மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


