Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகதிர்காமம் சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்குதல்

கதிர்காமம் சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்குதல்

கதிர்காமம், புத்தல வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

நேற்று (22) பிற்பகல் 2.30 மணியளவில் கதிர்காமம் – கிரிந்த வீதியில் பயணித்த யாத்ரிகர் ஒருவரை ஏற்றிச் சென்ற பேருந்து புத்தல நுழைவாயிலுக்கு அருகில் காட்டு யானையினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானை பேருந்தில் இருந்த பழங்கள் மற்றும் உணவு பொருட்களை சாப்பிடுவதற்காக பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதனால், பேருந்தின் கதவு மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles