Sunday, May 12, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக மாற்றி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாரத லக்ஷ்மனின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் முன்வைத்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியது.

இதன்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு...

Keep exploring...

Related Articles