ரத்தோட்டை – கம்மதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க முற்பட்ட போதே குறித்த மாணவன் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் இளநீர்களை பறிக்கச் சென்ற போது, மற்றொரு மாணவர் கொடுத்த மூங்கில் மரம், அதிசக்தி வாய்ந்த மின் கம்பியில் மோதி மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கம்மதுவ, களுகல்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.