மலையகத்திற்கான ரயில் சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவுக்கும் இடையில் தடம் புரண்டதன் காரணமாக நேற்று 3 மணி முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் தடைப்பட்டன.