Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைகளில் இடப்பற்றாக்குறை

சிறைகளில் இடப்பற்றாக்குறை

சிறை அறைகளின் கொள்ளளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறை நிர்வாகம் தொடர்பான செயல்திறன் தணிக்கை அறிக்கை இதை தெளிவுபடுத்தியுள்ளது.

அறிக்கையின்படி, கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறைக்கைதிகளை பராமரிக்க வருடாந்தம் 800 கோடி ரூபாவுக்கு மேல் அரச செலவழிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் சிறையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,795 என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால் பல கட்டிடங்கள் இடிந்துள்ளதாக சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெரிசலை நிர்வகிப்பது தொடர்பான செயல்திறன் தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles