தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருந்த அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையின் பின்னர் தற்போது மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக கடந்த 3ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து கடந்த 7ஆம் திகதி முதல் குறித்த சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.