நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் டின் மீன்களை (Tin Fish) நேற்று (11) முதல் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு டின் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.