Monday, May 20, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13) மாலை 5.00 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (13) மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 9.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தல நீர் விநியோகத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles