உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினர் இன்று (11) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தியவடன நிலமே மஹிந்த தேல மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா ஆரம்பேபொல ஆகியோர் அவரை வரவேற்றதுடன், இளவரசியைப் பார்ப்பதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து மக்கள் வந்திருந்தனர்.