Saturday, December 20, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

கொழும்பு – கண்டி வீதியில் பேலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 58 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles