Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles