100 இலங்கையர்களைக் கொண்ட குழு தென் கொரியாவிற்கு வேலைக்காகச் சென்றுள்ளது.
இது 2024 இல் வெளியேறிய முதல் குழுவாகும்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தகவலுக்கு அமைய , இன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குழு புறப்பட்டது.
தென் கொரியாவில் வேலைவாய்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 832ஆவது குழு இதுவாகும்., இவர்கள் உற்பத்தித் துறையில் வேலைகளைப் பெறுவார்கள்.
இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
SLBFE 2023 இல் தென் கொரியாவில் வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 6,412 இலங்கையர்களை அனுப்பியுள்ளது.