வாழைச்சேனை – பிரந்தரச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாய், மகள் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகளுக்கு 21 வயது எனவும் அவரது தாயாருக்கு 48 வயது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது 40 மில்லிகிராம் ஹெரோயின், 980 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22,300 ரூபாவும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.