கொழும்பு-2 இல் உள்ள மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் மின்சார சபை ஊழியர்கள் கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதிய மின்சார சட்டத்திற்கு எதிராக 5000க்கும் மேற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.