க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,300 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.