கடந்த ஆண்டில் மட்டும் தென்னை இலை உதிர்வு நோய் காரணமாக 5,000 தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
மாத்தறை, வெலிகம, ஹம்பாந்தோட்டை மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களில் தென்னை மரங்களில் இந்நோய் இன்னும் காணப்படுவதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தென்னை இலை வாடல் நோயை இவ்வருடம் மாத்தறை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.