பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 18% வரையிலான VAT அதிகரிக்கப்பட்டுள்ளதால், பேக்கரி தொழில் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்து ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.