Tuesday, May 14, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகரையோர ரயில் சேவையின் பயண அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் சேவையின் பயண அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் மார்க்கத்தின் பயண அட்டவணையில் இன்று முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி ரயில், இன்று முதல் பெலியத்த தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 5.25க்கு பயணிக்கும்.

அத்துடன், வார நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சாகரிகா கடுகதி ரயிலை சனிக்கிழமைகளிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் இரவு 8.35க்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை முன்னெடுக்கப்படும் ரயில் சேவை இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் பிற்பகல் 1.55க்கு பயணத்தை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles