Saturday, May 11, 2024
31 C
Colombo
செய்திகள்விளையாட்டுஓய்வு பெறுவதாக அறிவித்தார் டேவிட் வோர்னர்

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டேவிட் வோர்னர்

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார்.

எனினும் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோர்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தநிலையில், தாம் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரை இந்தியாவில் வைத்து வென்றமையை தாம் சிறந்த அடைவு மட்டமாக பார்ப்பதாகவும், இதுவே ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஓய்வு காலத்தில் தாம் உலக லீக்குகள் பலவற்றில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும், 2 ஆண்டுகளில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரில் அணிக்கு தேவைப்பட்டால் தாம் விளையாட தயாராக இருப்பதாகவும் வோர்னர் கூறியுள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles