நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் 30 முதல் 35 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.