Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமர் - இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் உத்தேச கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், திருகோணமலையில் ரயில்வே தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles