இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (29) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் இருவரும், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.