சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான இன்று (28) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஹியுமன் இம்யூனோகுளோபுலின் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மூன்று சூத்திரதாரிகளை வெளிப்படுத்தினார்.
அதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மேலதிக செயலாளர் வதை;தியர் ரத்நாயக்க மற்றும் போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் பிரதான சூத்திரதாரிகள் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.