Saturday, May 11, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து ஆசன முன்பதிவு மூலம் மூன்றரை கோடி ரூபா இலாபம்

பேருந்து ஆசன முன்பதிவு மூலம் மூன்றரை கோடி ரூபா இலாபம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் ஆசன முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக இபோச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 80,000 ஆசனங்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் சுமார் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1315 என்ற எண்ணின் மூலம் ஆசன முன்பதிவு செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles