Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு300 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

300 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹகளுகொல்ல, சுகலாதேவி கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சுமார் 10 ஏக்கர் நிலம் பரப்பில் 5அடி உயரம் உள்ள 300 கஞ்சா செடிகளுடன் பசறை அமுனிவத்தை பகுதியை சேர்ந்த 37வயதுடைய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் சந்தேக நபரை சியம்பலாண்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles