செக் குடியரசின் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்றதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 24 வயதான துப்பாக்கிதாரியும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது.
ஜன் பலாச் சதுக்கத்தில் உள்ள பல்கலைக்கழக கலை பீட கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 15:00 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றது.
தாக்குதல்தாரியும் அதே பீடத்தின் மாணவர் என்றும், இந்தத்தாக்குதலுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.