கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் எத்கால புதிய நகரில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து நேற்று (20) இரவு விபத்துக்குள்ளனாது.
விபத்தில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 வயதுடைய சிறுவன் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் நிதி அதிகாரியாக கடமையாற்றிய உலப்பனை சக் கிராமத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
காயமடைந்த சிறுவன் உயிரிழந்தவரின் மகன் என்பதுடன் அவர் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.