Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் இல்லை

மின்சார ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் இல்லை

இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களுக்கான அனைத்து போனஸ், கொடுப்பனவுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் முடக்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு, உடன் அமுலுக்கு வருகிறது.

2023க்கான போனஸுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து ஊக்கத்தொகை மற்றும் கொடுப்பனவுத் திட்டங்களை உள்ளடக்கிய முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ளவற்றுக்கும் பொருந்தும்.

மேலதிகமாக 2015 முதல் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வழங்கப்படும் 25% சம்பள உயர்வு நிறுத்தப்படும்.

ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 21 குறிப்பிட்ட கொடுப்பனவுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் பற்றிய விரிவான அறிக்கையை அமைச்சர் கோரியுள்ளார்.

2023 இல் வழங்கப்பட்ட மொத்தத் தொகை, கட்டண அட்டவணைகள் மற்றும் ஒவ்வொரு அதிகாரிக்கும் வாடகைக்கு எடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, அதனுடன் தொடர்புடைய வாடகைச் செலவுகள் ஆகியவற்றை அறிக்கை விவரிக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles