Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் 2,000க்கும் மேற்பட்டோர் கைது

இன்றும் 2,000க்கும் மேற்பட்டோர் கைது

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 2000க்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

1.1 கிலோ ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 126,060 கஞ்சா மற்றும் 19,507 போதை மாத்திரைகள் ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த வார இறுதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர் 6000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏறக்குறைய 68 மில்லியன் ரூபா பெறுமதியான 8 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த வாகனங்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles