Friday, January 16, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை வன்புணர்ந்த இராணுவ சிப்பாய் கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த இராணுவ சிப்பாய் கைது

14 வயது சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குருவிட்ட இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம வெலவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (19) ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles