அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்படத்தை எடுப்பதற்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 150 ரூபா வசூலிக்கப்பட்டது.