நெதுன்கமுவ ராஜா யானையின் உடலை பாதுகாக்கும் நடவடிக்கையை தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
ஆசியாவின் உயரமான யானையான நெதுன்கமுவ ராஜா மரணித்து 14 நாட்களுக்குள் அதன் தோலை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
விலங்குகளின் உடலை பாதுகாக்கும் போது பின்பற்றப்படும் சர்வதேச தரங்களுக்கு அமைய, அதன் தோல் மற்றும் தந்தங்கள் அகற்றப்பட்டன.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர், நெதுன்கமுவ ராஜா யானையின் உடலை பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.