Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிபத்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

கிரிபத்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று (18) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள ஹோட்டலுக்குள் அமைந்துள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு விடுதிக்கு உள்ளேயும் வெளியேயும் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 02.00 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles