நாட்டில் தேங்காய் அறுவடை குறைந்துள்ளதாக இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆரச்சிகே தெரிவிக்கையில், விளைச்சல் 400 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களால் குறைந்துள்ளது என்றார்.
கடந்த ஆண்டு தேங்காய் அறுவடை 3350 மில்லியன் காய்களாக இருந்தது, இந்த ஆண்டு 2950 மில்லியன்களாக குறைந்துள்ளது.
சுமார் 2 வருடங்களாக உரம் இடப்படாமையே இதற்கு முக்கியக் காரணம் என பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.