உடவளவ நீர்த்தேக்கத்தின் பிட்டபான பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக அந்த நீர்த்தேக்கத்திற்கு மேலாக செல்லும் வீதி இன்று முதல் மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என்று மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை குறித்த வீதியின் ஒரு மருங்கு மாத்திரம் திறக்கப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை மீண்டும் வீதி முற்றாக மூடப்படவுள்ளது.
ஜனவரி 15ஆம் திகதி வீதி முற்றாக திறக்கப்படும் என்று மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.