மேலதிக வகுப்புக்கு சென்றுவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவியை, அவரது காதலன் என கூறும் இளைஞன் கடத்தி சென்றுள்ளார்.
குறித்த இளைஞன் தன்னை தாக்கி சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி தனது 44 வயதுடைய தாயுடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மகளின் கையை இழுத்து, அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது முறைப்பாட்டாளரும் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்டதையடுத்து சந்தேகநபர் அவரை உதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மற்றும் கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.