ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
VAT வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.