பாடசாலை சீருடையில் ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் 28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் சட்டப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு அவர்களது திருமண விழா நடைபெற உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அரச பல்கலைக்கழகம் ஒன்றில் சட்ட வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் மாணவர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் சம்பாதிப்பதற்காக ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆபாச காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதுடன், அவர்களை கைது செய்யும் போது, ஆபாச வீடியோக்களை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
காணொளிக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாடசாலை சீருடைகள், டைகள் மற்றும் ஏனைய பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், இந்த சம்பவம் சில காலமாக இடம்பெற்று வருவதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் உருவாக்கப்பட்ட இணையக் கணக்கில் சுமார் 4,400 பயனர்கள் இருப்பதாகவும், அவர்களின் வீடியோக்கள் சுமார் 8.7 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஆண் புரிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதி கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.