Friday, May 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் பலி

மொனராகலை – திக்தலாவ பிரதேசத்தில் மரம்முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகன் வெட்டிக் கொண்டிருந்த மரம் முறிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை திக்தலாவ நெல்லிகெலே வீதியைச் சேர்ந்த 75 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் வீட்டுக்கு அருகில் உள்ள பலா மரத்தை வெட்டிக் கொண்டிருந்த போது, ​​முறிந்து விழுந்த பலா மரத்தின் கிளை தந்தையின் தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles