2024 ஆம் ஆண்டில் குற்றச் செயல்களுக்கு எதிராக 5,000 புதிய பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நெடுஞ்சாலை நுழைவாயில்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை எனவும் நெடுஞ்சாலை அமைப்பின் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணிகள் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.