பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு உயிரிழந்துள்ளார்.
இதன்போது, மேலும் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்ட நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
