மண்சரிவு அபாயம் காரணமாக கொஸ்லாந்தை – கெலிப்பனாவல பகுதியிலிருந்து மேலும் 41 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கு முன்னரும் மண்சரிவு அபாயம் நிலவிய போது 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கெலிப்பனாவல பிரதேசத்தில் இருந்து இதுவரையில் 279 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
