Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏக்கர் வரியை இடைநிறுத்த தீர்மானம்

ஏக்கர் வரியை இடைநிறுத்த தீர்மானம்

விவசாய நிலங்களுக்கான ஏக்கர் வரி அறவீட்டை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்களுக்காக, ஒரு ஏக்கருக்கு நூறு ரூபா வீதம், இந்த ஏக்கர் வரி வசூலிக்கப்படுறது. இந்த வரியினால் ஈட்டப்படும் வருமானத்தை விட, அதனை வசூலிப்பதற்காக அதிக தொகை செலவிடப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles