மின்சார கட்டணத்தை குறைக்கும் நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தின் போது மின்சார கட்டணத்தில் குறைப்பை எதிர்பார்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மின் கட்டணத்தை குறைக்கப்படும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.